`ஒவ்வொரு ஐபிஎல்லும், ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும் - பில்லா பாணியில் வெற்றியை கொண்டாடும் தாஹிர்

imran tahir talks about chennai super kings victory

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை வீழ்த்தி100 வது வெற்றியை பதிவு செய்த சென்னை இறுதிபோட்டிக்கு முன்னேறியது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் வாட்சனும், டு பிளிசிஸ்சும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் தங்கள் பங்குக்கு 50 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பௌலர்கள் முக்கிய காரணம் என கேப்டன் தோனி வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு குறித்து நேற்றைய ஆட்டம்குறித்து இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``எங்களோட ஐபிஎல் வாழ்க்கைல ஒவ்வொரு ஐபிஎல்லும், ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும், ஏன் ஒவ்வொரு பாலும், நாங்களா செதுக்குனது டா, எடுடா வண்டிய, போடுடா விசில” என்று பதிவிட்டுள்ளார். சி.எஸ்.கே ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் தாஹிரின் இந்த ட்வீட்டை ஷேர் செய்து வருகின்றனர்.

8வது முறையாக ஐபிஎல் பைனலுக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. இந்த முறையும் கோப்பையை கைப்பற்றுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கான விடை நாளை நடைபெறும் ஹைதராபாத் ஆட்டத்தில் தெரிந்துவிடும். இந்த வருட சாம்பியன் சென்னையா, மும்பையா என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்.

அந்துபோச்சு.. கெளம்பு.. கெளம்பு.. டெல்லி அணியை துவம்சம் செய்து ஃபைனலுக்கு சென்றது சிஎஸ்கே!

You'r reading `ஒவ்வொரு ஐபிஎல்லும், ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும் - பில்லா பாணியில் வெற்றியை கொண்டாடும் தாஹிர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்' - சென்னை வெற்றி குறித்து புலவர் ஹர்பஜன்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்