பிரசிடென்ட் கோப்பை போட்டி தங்கம் வென்றார் மேரிகோம்

Mary Kom wins gold medal in style ahead of World Championships

இந்தோனேசியாவில் நடைபெற்ற பிரசிடென்ட் கோப்பைக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்.


இந்தோனேசியாவின் லாபுயன் பஜோவில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் 36 வயதான இந்திய வீராங்கனை மேரிகோம் பங்கேற்றார். அவர் 51 கிலோ எடைப் பிரிவினருக்கான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஏப்ரல் பிராங்ஸை 5-0 என்ற எண்ணிக்கை அடிப்படையில் எளிதாக வென்றார். ஏற்கனவே ஆறு முறை உலக சாம்பியன் பெற்ற மேரி கோம், இந்தோனேசியா போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார்.


மேரிகோம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற இந்தியன் ஓப்பன் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார். அதன்பின், மே மாதம் நடைபெற்ற ஆசியப் போட்டியில் விளையாடாமல் தவிர்த்து விட்டார். அடுத்ததாக, ரஷ்யாவில் நடைபெறும் உலக குத்துச் சண்டைப் போட்டியில் பங்கேற்கிறார். அதில் வெற்றி பெறும் போது, 2020ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்.

You'r reading பிரசிடென்ட் கோப்பை போட்டி தங்கம் வென்றார் மேரிகோம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் : சபாநாயகரின் அவசர முடிவுக்கு காரணம் இதுதான்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்