சச்சினை முந்துவார் கோலி: சேவக் நம்பிக்கை

"சதம் விளாசுவதில் மாஸ்டர்பேட்ஸ்மேன் சச்சினை விராட் கோலி முந்துவார்" என முன்னாள் இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரம் சேவக் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்கவீரர் சேவக் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார். 'வீருவிடம் கேளுங்கள்' என்ற ஹேஷ் டேக் உடன் ரசிகர்கள் சேவக் உடனானக் கேள்வி பதில் சுற்றில் பங்கேற்கலாம். இதில் ரசிகர்களின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் சேவக் பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர், 'விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதியில் எத்தனை சதங்கள் ஒரு நாள் போட்டிகளில் பெறுவார்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு சேவக் பதிலளிக்கையில், "62" என்று பதிலளித்துள்ளார். விராட் கோலி சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தொடரை வென்றதுடன் மட்டுமல்லாமல் ஒரு நாள் போட்டிகளில் 35 சதங்கள் அடித்துப் புதிய சாதனை படைத்துள்ளார்.

இரு அணிகள் விளையாடும் தொடரில் மூன்று சதங்கள் மூலம் 500 ரன்களுக்கு மேல் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை எட்டியுள்ளார் கேப்டன் கோலி.

You'r reading சச்சினை முந்துவார் கோலி: சேவக் நம்பிக்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்த குறும்புக்கார நாய்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாவே இருங்க பாஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்