ldquoஒரு கேப்டனாக அணியின் பலத்தை உணர்ந்தேன்rdquo - மனம் திறக்கும் ரோகித் சர்மா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் தற்காலிகக் கேப்டனாக விளையாடிய ரோகித் சர்மா தனது அணியின் பலம் குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

இந்தியக் கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டித் தொடர்களில் பங்கேற்றது. டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தபோதும் அடுத்தடுத்து நடந்த ஒரு நாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களில் சாதனை வெற்றியைப் பதிவு செய்தது. இதில் டி20 போட்டித் தொடரில் கேப்டன் விராட் கோலி உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் விளையாட முடியவில்லை. இதையடுத்து அணியின் கேப்டனாக ரோகித் சர்மா களமிறங்கி வெற்றிகோப்பையையும் பெற்றுத் தந்தார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில், "இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தின் மூலமாகவே ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் கோப்பையைத் தட்டிச் செல்ல முடிந்தது. இக்கட்டான சூழல்களின்போதும் இந்திய அணியில் யாரும் சோர்வடையவில்லை. எங்களது விடாமுயற்சியின் காரணமாகவே நாங்கள் இன்று வெற்றியாளர்களாக நிற்கிறோம்" எனக் கூறினார்.

You'r reading ldquoஒரு கேப்டனாக அணியின் பலத்தை உணர்ந்தேன்rdquo - மனம் திறக்கும் ரோகித் சர்மா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - “இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைச் சந்திக்கவும் தயார்”- புவனேஷ்குமார் சவால்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்