13 பேருக்கும் நெகட்டிவ்.. ஆனால் பயிற்சி?!.. சென்னை அணிக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி

Good news for Chennai team

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19ல் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்றுள்ளனர். துபாய் சென்றதும் 28-ம் தேதி எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்டில் சென்னை அணியைச் சேர்ந்த தீபக் சஹர், ருதுராஜ் கெய்க்வாட் உள்பட 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. இதனால் அவர்கள் அனைவரும் துபாயில் சிஎஸ்கே வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அங்குக் கடந்த ஒரு வாரமாக அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, நேற்று 13 பேருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் 13 பேருக்கும் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது.இதுதொடர்பாக சென்னை அணி நிர்வாகம் அளித்துள்ள பேட்டியில், `` நாளை மறுநாள் மீண்டும் ஒரு முறை இவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படவுள்ளது. அதன் முடிவுகள் வெளிவந்த பின்னரே, வீரர்கள் பயிற்சியைத் தொடர்வார்கள். கெய்க்வாட், தீபக் சாஹர் இருவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் காலம் முடித்த பின்னரே அணியில் இணைவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

You'r reading 13 பேருக்கும் நெகட்டிவ்.. ஆனால் பயிற்சி?!.. சென்னை அணிக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இப்படியும் ஒரு அதிசயம் கோழிக்குஞ்சுக்கு 4 கால்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்