திட்டமிட்டபடி +2 செய்முறைத் தேர்வுகள் பிப்.1-ந்தேதி முதல் தொடங்கும் - பள்ளிக்கல்வித் துறை செயலர் அறிவிப்பு!

Practical exams starts from feb1st as announced by department of Education

ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக +2 செய்முறைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படமாட்டாது, திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் பல பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறவில்லை. தேர்வுகள் நெருங்கும் வேளையில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்வுகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் திட்டமிட்டபடி +2 செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து +2 பொதுத் தேர்வுகளையும் எவ்வித பாதிப்புகளும் இன்றி நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

You'r reading திட்டமிட்டபடி +2 செய்முறைத் தேர்வுகள் பிப்.1-ந்தேதி முதல் தொடங்கும் - பள்ளிக்கல்வித் துறை செயலர் அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 3-வது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி -நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்