கரை சேருவாரா உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், யார் கரை சேர்வார்கள் என்பதுதான் முக்கியம் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், யார் கரை சேர்வார்கள் என்பதுதான் முக்கியம் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், தனியார் இணையத்தளம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், ‘அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது. சினிமாவில் நடித்துக் கொண்டிருந்ததால் அரசியலில் நேரடியாக இயங்குவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால், விரைவில் நேரடியாக களத்துக்கு வருவேன்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், யார் கரை சேர்வார்கள் என்பதுதான் முக்கியம்.

அரசியல் என்பது ஒரு கடல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கடலில், அதிமுக என்கின்ற கப்பல் கரை சேர்ந்துவிட்டது. எனவே, எந்த நதியாக இருந்தாலும் நாங்கள் சமாளிப்போம்' என்று தெரிவித்துள்ளார்.

You'r reading கரை சேருவாரா உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பதிவெண்ணில் சி.எம் என்ற எழுத்துகள் கொண்ட காரை பயன்படுத்தும் தமிழக முதல்வர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்