திருநாவுக்கரசு வீட்டுக்கு பின்னால் சடலம்.... சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய ஆடியோ

Body in thirunavukarasus backside home

பொள்ளாச்சி விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது முகநூலில் வெளியிட பட்டுள்ள ஆடியோ பெரும் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளை ஆபாச படம் எடுத்து முக நூலில் வெளியிட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் திருநாவுக்கரசு, சதீஸ், வசந்தகுமார் மற்றும் சபரிராஜன் உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையிலடைக்கப் பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் பின்னர் தொடர்ந்து இந்த வழக்கில் பல பெண்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அவர்களால் பாதிக்கப்பட்ட பெண் தப்பித்து வந்ததாக பெண் ஒருவர் முகநூலில் வெளியிட்ட ஆடியோ ஒன்றை வேகமாக பரவி வருகிறது. இந்த ஆடியோவில் "திருநாவுக்கரசு மற்றும் அவரது கும்பல் வயதுக்கு வராத பெண்ணை ஒரு நாள் முழுவதும் கொடுமைப்படுத்தி பாலியல் வன்கொடுமை படுத்தியதால் அந்த பெண் இறந்து விட்டதாகவும், அந்த பெண்ணின் சடலத்தை வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என, எங்களையும் மிரட்டினர். அந்தக் கும்பலில் எட்டு பேருக்கு மேல் இருக்கிறார்கள். பல பெண்களை அவர்கள் இந்த மாதிரி சித்தரவதை செய்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த செய்தி வெளிவரவில்லை உங்களால் முடிந்த வரை இந்த செய்தியை பகிரவும் எனக் கூறியுள்ளார்.

இது உண்மையான ஆடியோவா என தெரியவில்லை. எனினும் இந்த ஆடியோ இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

You'r reading திருநாவுக்கரசு வீட்டுக்கு பின்னால் சடலம்.... சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய ஆடியோ Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குக்கர் சின்னம் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு; டிடிவி தினகரனுக்கு ‘சாதகமா’ ‘பின்னடைவா’

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்