கோவை சிறுமியை கொன்ற காமுகன் சந்தோஷ்குமார் - சிறையில் அடைப்பு

Coimbatore child sexual abuse and murder case, accused Santhosh Kumar sent to jail

கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காமுகன் சந்தோஷ்குமா ர் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கோவை அருகிலுள்ள துடியலூரில் கடந்த செவ்வாய்க்கிழமை 7 வயது சிறுமி தன் வீட்டருகே ரத்தக் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேத அறிக்கையில், அச்சிறுமி பலமுறை வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் அப்பகுதி மக்களிடம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த மாபாதக செயலை செய்த கொடூரன் என்பதைக் கண்டு பிடிக்க போலீஸ் திணறியது. 10 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். கடைசியில் அந்தக் கொடூரன் சிறுமியின் வீட்டுக்கு அருகிலேயே வசித்த சந்தோஷ்குமார் என்பது 6 நாட்களுக்கு பின்பே துப்பு துலங்கி கைது செய்யப்பட்டான்.

மனைவியைப் பிரிந்து வாழும் 34 வயதான சந்தோஷ்குமார் கொலையுண்ட சிறுமியின் வீட்டருகே உள்ள தன் பாட்டியின் வீட்டில் தங்கியுள்ளான். சம்பவத்தன்று மாலை சிறுமியை நைசாக வீட்டிற்குள் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளான்., எங்கே வெளியில் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளான். இரவில் சடலத்தை அப்புறப்படுத்தலாம் என்று நினைத்து, வீட்டின் ஒரு அறையில் மறைத்து வைத்துள்ளான்.

அந்த நேரம் பார்த்து உடல் நலமில்லாமல் இருந்த அவனுடைய பாட்டி இறந்து விட உறவினர்கள் கூடி விட்டனர். சிறுமியின் சடலம் இருந்த அறையை பூட்டியுள்ளான்.

ஒரு பக்கம் சிறுமியை காணவில்லை என அவளின் பெற்றோர் தேட, சந்தோஷ்குமாரும் ஒன்றும் தெரியாத அப்பாவி போல், சேர்ந்து தேடி நாடகமாடியுள்ளான். பின்னர் அதிகாலை நேரத்தில் தன் டி-சர்ட் டால் சிறுமியின் உடலைச் சுற்றி சிறுமியின் வீட்டருகே போட்டுள்ளான்.

யார், யாரையோ சந்தேகப்பட்ட சிறுமியின் பெற்றோர், தன் பாட்டியை இழந்த சோகத்தில் இருந்தது போல் நாடகமாடிய சந்தோஷ் குமாரை சந்தேகிக்காமல் விட்டு விட்டனர். பின்னர் அவனுடைய டி-சர்ட் தான் காட்டிக் கொடுத்து போலீசில் சிக்கியுள்ளான்.

போலீஸ் விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ததை சந்தோஷ்குமார் ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரு முறை அச்சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறியதாகவும் தகவல் வெளியான நிலையில் இன்று அதிகாலை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். அவனை போலீஸ் காவலில் எடுத்து மீண்டும் தீவிர விசாரனை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

You'r reading கோவை சிறுமியை கொன்ற காமுகன் சந்தோஷ்குமார் - சிறையில் அடைப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-45 குவியும் பாராட்டுக்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்