இதற்கு எச்.ராஜா வாய் திறக்காதது ஏன்? எதிர்த்தால் சல்யூட் செய்வேன் - விஷால்

எச்.ராஜா ஆண்டாள் சர்ச்சை, தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை ஆகியவற்றுக்கு கருத்து தெரிவித்தார். ஆனால், பேருந்துக் கட்டண உயர்வு குறித்து அவர் குரல் கொடுக்காதது ஏன்? என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

எச்.ராஜா ஆண்டாள் சர்ச்சை, தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை ஆகியவற்றுக்கு கருத்து தெரிவித்தார். ஆனால், பேருந்துக் கட்டண உயர்வு குறித்து அவர் குரல் கொடுக்காதது ஏன்? என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேருந்துக் கட்டண உயர்வை ஒரு குறிப்பிட்டவர்கள் மட்டும் எதிர்க்கவில்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, பொதுமக்கள் அனைவருமே உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

பேருந்துக் கட்டண உயர்வு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, பேருந்துக் கட்டணத்தை முன்பு இருந்தது போல் குறைக்க வேண்டும். இதில் ஏற்படும் இழப்பை வேறு விதத்தில் சரிகட்ட வேண்டும்.

அரசு நினைத்தால் அதை செய்யலாம். அரசு என்பது மக்களுக்காகவே இருக்கிறது. எனவே பேருந்துக் கட்டணத்தை குறைப்பதுதான் அரசுக்கு நல்லது.

பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா ஆண்டாள் சர்ச்சை, தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை ஆகியவற்றுக்கு கருத்து தெரிவித்தார். நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், பேருந்துக் கட்டண உயர்வு குறித்து அவர் குரல் கொடுக்காதது ஏன்?

பஸ் கட்டண உயர்வையும் எச்.ராஜா எதிர்த்தால் அவருக்கு நான் ‘சல்யூட்’ செய்வேன். பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக அவர் போராட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

You'r reading இதற்கு எச்.ராஜா வாய் திறக்காதது ஏன்? எதிர்த்தால் சல்யூட் செய்வேன் - விஷால் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம் தெரியுமா? - ஃபிரான்ஸ், கனடாவை முந்தியது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்