நான் அரசியலுக்கு வந்தா.. என் மனைவி என்னை விட்டுட்டு போயிடுவாங்க ரகுராம் ராஜன் கலகல பேட்டி!

My wife has said she will not stay with me if I join politics, says Raghuram Rajan

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சென்னையில் ஒரு போர்ட் மீட்டிங்கிற்காக வந்த போது, அவரிடம் செய்தியாளர்கள் சிலர் கேட்ட கேள்விக்கு அவரும் மனம் விட்டு பதிலளித்துள்ளார்.

பொருளாதார நிபுணர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராகவும் பணிபுரிந்த ரகுராம் ராஜன், தற்போது சிகாகோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு கலைக் கல்லூரிகளின் சீரமைப்பு தொடர்பான க்ரியா மீட்டிங்கிற்காக சென்னை வந்த ரகுராம் ராஜனிடம் செய்தியாளர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

இந்திய அரசியலில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? எந்த கட்சியிலாவது சேரும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, சிரித்துக் கொண்டே பதிலளித்த ரகுராம் ராஜன், இதுபற்றி என் மனைவியிடம் கூறினேன் என்றால், அவர் என்னை விட்டு ஓடியே விடுவார் எனக் கூறினார்.

மேலும், அரசியல் எனக்கான இடம் இல்லை என்றுக் கூறிய ராஜன், பேசத் தெரிந்தவர்கள் பேசி ஓட்டை வாங்கிக் கொள்ளட்டுமே என புன்னகைத்தார்.

இந்தியாவிற்கு மீண்டும் வந்து பணிபுரியும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, என் சேவை இந்தியாவிற்கு தேவைப்பட்டால், உடனடியாக ஓடி வந்து சேவை புரிய காத்திருக்கிறேன் என்றார்.

கவலைப்படுறீங்களா? கண்டிப்பா இதுதான் கிடைக்கும்!

You'r reading நான் அரசியலுக்கு வந்தா.. என் மனைவி என்னை விட்டுட்டு போயிடுவாங்க ரகுராம் ராஜன் கலகல பேட்டி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத்திய பிரதேசத்தில் ரயில் நிலைய கேண்டீனில் பயங்கர தீ விபத்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்