காவிரியில் மே, ஜூன் மாதத்திற்கான நீரை திறக்க வேண்டும் -மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

TN govt urges cauvery management commission to order to Karnataka release water immediately:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் மே மற்றும் ஜுன் மாதங்களில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இந்த ஆண்டிற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் தமிழக, கேரள கர்நாடக அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி, மே மாதம் காவிரியில் திறக்க வேண்டிய 2 டிஎம்சி நீரை இம்மாதம் இறுதிக்குள் கர்நாடகம் வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மேகதாது அணை திட்டம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அதுகுறித்து விவாதிக்க கூடாது. மேகதாது குறித்து இனிவரும் கூட்டங்களிலும் விவாதிக்க கூடாது எனவும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

குறுவை சாகுபடிக்காக கர்நாடகம் ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகம் நீரை திறந்து விடுவது இல்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக உள்ளது என நம் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இந்தக் கூட்டம் நடைபெறும் போது, நாகை தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. செல்வராஜ் வருகை தந்தார். காவிரி யில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரிடம் வலியுறுத்தினார்.

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது- ராமதாஸ்

You'r reading காவிரியில் மே, ஜூன் மாதத்திற்கான நீரை திறக்க வேண்டும் -மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மக்களை ஈர்க்கும் தலைவராகி விட்டார்... மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி.... ரஜினிகாந்த் புகழாரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்