சென்னை ஐ.டி பகுதியில் கொடூரத் தாக்குதல்: பெண் படுகாயம்

சென்னையில் பள்ளிக்கரணை ஐடி பகுதி அருகே ஐடி பெண் ஊழியர் மர்மமான முறையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை பணி முடிந்து 2.30 மணி அளவில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணை மர்ம நபர்கள் பின் தலையில் இரும்புராடு கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அப்பெண் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது கொள்ளையடிப்பதற்காக நடத்தப்பட்ட சம்பவமா அல்லது அப்பெண்ணின் விரோதிகளா அல்லது பாலியல் துன்புறுத்தல் குற்றமா என்பது குறித்துப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

You'r reading சென்னை ஐ.டி பகுதியில் கொடூரத் தாக்குதல்: பெண் படுகாயம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தாஜ்மஹாலுக்கு ரூ.50 உள்ளே கல்லறைக்கு ரூ.200.. சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்