அருண் ஜெட்லி மறைவு ஓ.பி.எஸ்., தமிழிசை நேரில் அஞ்சலி

TN deputy cm ops, bjp leader tamilisai pays tribute to Arun Jaitley

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடலுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


டெல்லியில் நேற்று காலமான பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லியின் உடல், பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் , பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் ஜெட்லியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

அருண்ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அருண் ஜெட்லி மறைவு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், பாஜகவிற்கும் பேரிழப்பு ஆகும். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தவர். தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பெரும் பாலமாக இருந்தவர் அருண் ஜெட்லி. அவருடைய மறைவு பேரிழப்பாகும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

You'r reading அருண் ஜெட்லி மறைவு ஓ.பி.எஸ்., தமிழிசை நேரில் அஞ்சலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உறுப்பினராக அதிகபட்ச வயது 35 ... திமுக இளைஞரணியில் சேர வயது வரம்பில் தளர்வு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்