சிம்பு கடவுள் முருகன் மாதிரி பேசக்கூடிய அறிவு படைத்தவர் - டி.ராஜேந்தர் அதிரடி

கடவுள் முருகன் மாதிரி பேசக்கூடிய அறிவு படைத்தவர் நடிகர் சிம்பு என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

கடவுள் முருகன் மாதிரி பேசக்கூடிய அறிவு படைத்தவர் நடிகர் சிம்பு என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

இது குறித்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், “தமிழகத்தில் 42 வருடங்களுக்கும் மேலாக அரசியல் செய்து வருகிறேன். திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறேன். நான் இதுவரை முதல்வர் பதவிக்கோ, அமைச்சர் பதவிக்கோ? ஆசைப்பட்டதில்லை.

நான் தொடங்கிய லட்சிய திமுக 15ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இன்று கட்சி ஆரம்பிக்கிறவர்கள் 3 நாட்களில் முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். போராடினால்தான் அரசியலில் வெற்றி பெற முடியும்.

தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக முக்கிய முடிவு எடுக்கப்போகிறேன் என்று தெரிவித்திருந்தேன். இதையடுத்து நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்ன முடிவு என்று மக்கள் என்னை பார்த்து ஆர்வமுடன் கேட்கிறார்கள்.

என்னுடைய முடிவு பற்றி நாளை சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவிக்க உள்ளேன். மாற்றம் கொண்டு வருகிறோமோ இல்லையோ எனது முடிவில் மாற்றம் இருக்காது. தமிழக மக்களின் சக்தியை திசை திருப்பக்கூடிய யுக்தி என்னிடம் உள்ளது.

என்னையும், எனது மகனையும் வாழவைத்த தமிழக மக்களுக்கு என்றும் விசுவாசமாக இருப்போம். கடவுள் முருகன் மாதிரி பேசக்கூடிய அறிவு படைத்தவர் நடிகர் சிம்பு. நானும் ஒரு ஆன்மீகவாதி தான். ஆனால் யாருக்கு ஜாதகம் நன்றாக இருக்கிறதோ? அவர்கள் ஜெயிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading சிம்பு கடவுள் முருகன் மாதிரி பேசக்கூடிய அறிவு படைத்தவர் - டி.ராஜேந்தர் அதிரடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? - சுப்பிரமணிய சாமி அதிர்ச்சி தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்