அண்ணா மீண்டும் உயிரோடு வந்தால் பாஜகவில்தான் சேருவார் - பாஜக தலைவர் பேச்சு

அண்ணா மீண்டும் உயிரோடு வந்தால், அவர் பாரதிய ஜனதா கட்சியில்தான் சேருவார், திராவிட முன்னேற்றக் கழகத்தில் அல்ல என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் கூறியுள்ளார்.

அண்ணா மீண்டும் உயிரோடு வந்தால், அவர் பாரதிய ஜனதா கட்சியில்தான் சேருவார், திராவிட முன்னேற்றக் கழகத்தில் அல்ல என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் கூறியுள்ளார்.

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சரரான நைனார் நாகேந்திரனின் தலைமையில் பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்களும் பாஜகவில் சேருகின்ற நிகழ்வினையொட்டி ஜவஹர் மைதானத்தில் பாஜகவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசிய செயலாளர் முதளிதர் ராவ் பேசினார். அப்போது அவர், “பாஜக மூலமாக உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் தமிழ்நாட்டில் கிடைக்கும். கருணாநிதி அவரோடு இல்லாத நிலைமையில், திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியோடு உறவாடி வருகிறார்.

அண்ணா மீண்டும் உயிரோடு மீண்டு வந்தால், அவர் பாரதிய ஜனதா கட்சியில்தான் சேருவார், திராவிட முன்னேற்றக் கழகத்தில் அல்ல. பாஜகவால் மட்டுமே ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் அளித்த ஆட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்க முடியும் என்று அவர் கூறினார்.

You'r reading அண்ணா மீண்டும் உயிரோடு வந்தால் பாஜகவில்தான் சேருவார் - பாஜக தலைவர் பேச்சு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கலாய்கும் நெட்டிசன்களுக்கான ’தேசிய கீதம்’ - வைரலாகும் வீடியோ!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்