தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் தாண்டியது..

covid19 cases in tamilnadu crosses to 30,000.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினமும் புதிதாக 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூன்6) மட்டும் புதிதாக 1458 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், சவுதியில் இருந்து வந்த 5 பேர், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த ஒருவர், அந்தமானில் இருந்து வந்த ஒருவர் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 13 பேர், கர்நாடகாவில் இருந்து வந்த 3 பேர், டெல்லியில் இருந்து வந்த 4 பேர், கேரளாவிலிருந்து வந்த 3 பேர் மற்றும் குஜராத், பீகார், ஆந்திரா, புதுச்சேரியில் இருந்து வந்த தலா ஒருவரும் அடங்குவர்.

தற்போது தமிழகத்தில் 30,152 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 633 பேரையும் சேர்த்து மொத்தம் 16,395 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 19 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 15,389 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 5 லட்சத்து 50,643 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.சென்னையில் தினமும் 1000 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று அதிகபட்சமாக 1146 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 26,993 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் 95 பேர், திருவள்ளூரில் 79 பேர், தூத்துக்குடி 14 பேர், மதுரை 7 பேர், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலா 6 பேர் மற்றும் இதர மாவட்டங்களில் ஒரு சிலருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

You'r reading தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் தாண்டியது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாஜகவின் ஆள்பிடிப்பு வேலை.. ஓட்டலில் தஞ்சமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்