தமிழகத்தில் 3வது அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு..

corona infected minister Sellur Raju.

தமிழகத்தில் இது வரை மூன்று அமைச்சர்களுக்கு கொரோனா பாதித்திருக்கிறது. தமிழகத்தில் இது வரை ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன் உள்படப் பலரும் இந்நோயால் பலியாகியுள்ளனர்.தற்போது அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோருக்கு கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், அமைச்சர் தங்கமணியின் மனைவி மற்றும் மகன், மருமகள், டிரைவர்களுக்கும் கொரோனா பாதித்திருந்தது.இதற்கிடையே, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு காய்ச்சல் ஏற்படவே அவர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது இன்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தமிழகத்தில் 3வது அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தொடுகிறது.. பலி 21,604 ஆக உயர்வு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்