12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரம் தாண்டியது..

corona cases rise to 10,000 in 12 districts in tamilnadu.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.சீனா வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவில் தொடர்ந்து பல மாநிலங்களில் பரவி வருகிறது. நோய்ப் பாதிப்பில் தொடர்ந்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தினமும் 6 ஆயிரம் பேருக்குத் தொற்று பரவி வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.22) 5980 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 23 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.

நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 73,410 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5603 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 13,280 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 80 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 6420 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1294 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் ஒரு லட்சத்து 24.071 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.

செங்கல்பட்டில் நேற்று 406 பேருக்கும், காஞ்சிபுரம் 257, மதுரை 96, திருவள்ளூர் 384 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டில் இது வரை 23,145 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 15,289 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 13,328 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 22,122 ஆக உயர்ந்துள்ளது. மேலும், விருதுநகர், வேலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, தேனி, ராணிப்பேட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.

You'r reading 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரம் தாண்டியது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விழிகளுக்கு அழகூட்டும் இயற்கையான கண் மை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்