யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு - கமல்ஹாசன் சாடல்

மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளை மீறி, நெல்லை, செங்கோட்டை வழியாக ரதயாத்திரை இன்று தமிழகத்திற்குள் நுழைந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில், 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு - கமல்ஹாசன் சாடல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரயில்வே பணியை வழங்கும்படி இளைஞர்கள் திடீர் போராட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்