4 வாரங்கள் அவகாசம் தேவை... 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் பதில்!

governor replied dmk letter

மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க அவகாசம் தேவை என ஆளுநர் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மசோதா தாக்கல் செய்து அதை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன் தமிழக அமைச்சர்கள் இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து இதுதொடர்பாக பேசினர். மேலும் ஒப்புதல் தரும் வரை மருத்துவ கவுன்சிலிங்கை நடத்த போவதில்லை என்று அறிவித்தனர். இதன் பின் இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியது.

திடீரென இந்த விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் இன்று, மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகை முன் அக்டோபர் 24ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார் ஸ்டாலின். மேலும் இது தொடர்பாக ஆளுநருக்கு கடிதமும் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு ஆளுநர் தரப்பில் இருந்து பதில் வெளியாகியிருக்கிறது. அதில், ``மசோதா தொடர்பாக அனைத்து கோணங்களிலும் ஆராய வேண்டி இருக்கிறது. ஒரு முடிவுக்கு வர, 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் வேண்டும். என்னை சந்தித்த அமைச்சர்களிடம் இதைத் தான் எடுத்து கூறினேன்" எனக் கூறப்பட்டுள்ளது.

You'r reading 4 வாரங்கள் அவகாசம் தேவை... 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் பதில்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவின் அடுத்த அதிரடி! வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட நாக் ஏவுகணை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்