இன்னும் அவர் அப்பு கமலாகவே இருக்கிறார்... விமர்சித்த அதிமுக!

admk attacked kamalhassan

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், இன்று தனது கட்சி நிர்வாகிகளுடன் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதன்பின் கமல் பேசுகையில், ``திராவிடத்துடன் தான் கூட்டணி, கழகங்களுடன் கூட்டணி இல்லை. 3ஆவது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு வந்து விட்டதாகவும், மக்களுடனே எங்கள் கூட்டணி" என்றவர் ஆளும் கட்சியின் குறைகள் குறித்தும் பேசியிருந்தார்.

இதற்கு தற்போது அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுக செய்தித்தொடர்பாளர் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கழகங்களோடு கூட்டணி இல்லை என்கிறார் கமல். கூட்டணி வைக்கிற அளவிற்கு கமல் இன்னும் வளரவில்லை. இன்னும் அப்பு கமலாகவே இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கட்சி நிர்வாகிகளுடன் நிகழ்ச்சியில், ``பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவது பற்றி பேசிய அவர் ஆம் நான் பெறுவது உண்மைதான். அதனை என்னை வாழ வைத்து அவர்களிடமே மீண்டும் கொட்டுவேன்" என்று கூறியுள்ளார்.

You'r reading இன்னும் அவர் அப்பு கமலாகவே இருக்கிறார்... விமர்சித்த அதிமுக! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐடிபிஐ ன் வருமான திட்டம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்