கொரோனா சிகிச்சையில் 9 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைவு..

தமிழகத்தில் தற்போது 9 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆனாலும், இப்போது தினமும் ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று பரவி வருகிறது.

தமிழக அரசு நேற்று(டிச.25) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1027 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இதையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 12,142 ஆக உயர்ந்தது.
மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1102 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 90,965 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 12 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,048 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9129 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.

சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் தினமும் 50க்கும் குறையாதவர்களுக்குத் தொற்று பரவி வருகிறது. மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 23509 பேருக்கும், கோவையில் 51,695 பேருக்கும், செங்கல்பட்டில் 49,556 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42,359 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. தமிழகம் முழுவதும் நேற்றும் 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டதில் ஆயிரம் பேருக்குத்தான் தொற்று பாதிப்பு உறுதியானது. அதனால் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது.

You'r reading கொரோனா சிகிச்சையில் 9 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை 28ஆம் தேதி முதல் துவக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்