தமிழகத்தில் கொரானா சிகிச்சையில் 6488 பேர்.. புதிய பாதிப்பு குறைந்தது..

தமிழகத்தில் தற்போது 6488 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை 665 ஆகக் குறைந்துள்ளது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமானோருக்கு நோய் பாதித்தது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வேகமாகப் பரவிய கொரோனா தொற்று நோய்ப் பாதிப்பு, அக்டோபர் மாதத்திற்கு பிறகு குறையத் தொடங்கியது. தற்போது பல மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.

மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 60 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு நேற்று(ஜன.14) வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று 60 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், புதிதாக 665 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களைச் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 28,952 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 826 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 10,218 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 4 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,246 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6488 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னையில் நேற்று புதிதாக 195 பேருக்கும், செங்கல்பட்டில் 44 பேருக்கும், திருவள்ளூரில் 31 பேருக்கும், கோவையில் 71 பேருக்கும் சேலத்தில் 25 பேருக்கும் திருப்பூரில் 25 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 24 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை 20க்கும் கீழ் குறைந்துள்ளது.

You'r reading தமிழகத்தில் கொரானா சிகிச்சையில் 6488 பேர்.. புதிய பாதிப்பு குறைந்தது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்