மதுபோதையில் மகனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தந்தை.. வேலூரில் பரபரப்பு...

நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் நகராட்சியில் உள்ள ஐகோ கோபால் தெருவில் வசிப்பவர் தான் சித்ரா. இவரது கணவர் சேகர். சேகர் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் விழுப்புரம், காந்தி சாலையில் ஓட்டலை நடத்திவரும் முருகனுக்கும் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியதால் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சித்ராவின் மருமகனான சோனு மற்றும் முருகன் ஆகிய இருவரும் நேற்று மொட்டை மாடியில் தனியாக பேசிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது இருவருக்கு இடையே திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டு அது சண்டையாக உருவெடுத்தது. அப்பொழுது கோவத்தின் உச்சியில் இருந்த சோனு தனது கையில் உள்ள கத்தியை எடுத்து முருகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இரத்தம் சொட்ட சொட்ட மயங்கி விழுந்த முருகன் சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளார். தகவலிருந்து சம்பவ இடத்திற்கு படையெடுத்த போலீஸ் இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த முருகனை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து கொலை வழக்கில் சிக்கிய சோனு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸ் கைது செய்துள்ளனர்.

You'r reading மதுபோதையில் மகனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தந்தை.. வேலூரில் பரபரப்பு... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சந்தேகப்பட்ட ரோந்து போலீஸ்: கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்