ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியா?.. மத்திய அரசின் பதிலால் எழுந்த சிக்கல்!

கொரோனா சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு போக்க நேற்று ஸ்டெர்லைட் நிறுவனம் புதிய மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் ``ஸ்டெர்லைட் நிறுவனத்தால் ஆக்சிஜன் உற்பத்தி செய்யமுடியும். அரசு அனுமதி கொடுத்தால் தற்போது இருக்கும் சூழ்நிலை சமாளிக்க ஒருநாளைக்கு ஐநூறு டன் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக தருகிறோம்" எனக் கூறியிருந்தது.

இந்த வழக்கில், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைய திறக்க அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அனுமதி வழங்கப்படுமா என்ற அச்சம் நிலவி வருகிறது.

இதற்கிடையே, திடீரென ஸ்டெர்லைட் நிறுவனம் இப்படி கோரிக்கை வைக்க வேறு பின்னணி இருக்கிறது எனக் கூறுகிறது விவரம் அறிந்த வட்டாரங்கள். ஸ்டெர்லைட் கூறியிருப்பதில் பல கார்ப்பரேட் உத்திகள் உள்ளன. அரசு அந்த ஆலையை பலநாட்களாக பூட்டிவைத்துள்ளார்கள். சில மாதங்கள் ஆலையை சர்வீஸ் செய்ய சொல்லி திறக்கச்சொல்லி மனு கொடுத்து அதுவும் கிடப்பில் உள்ளது. இந்த நேரத்தில் தான் ஆக்சிஜன் தயாரித்து தருகிறோம் எனக் கூறி சைக்கிள்கேப்பில் ஆலையை திறந்து பழுதை சரிசெய்யலாம் என்று திட்டமிட்டு இருக்கலாம்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஒருநாளைக்கு ஐநூறு டன் ஆக்சிஜன் தயாரிக்கும் திறன் உண்மையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அரசை வைத்தே ஆலையை திறக்கவைத்து ஆலையை சரிசெய்தபின் ஆக்சிஜனை தயாரித்து இலவசமாக கொடுத்தபிறகு ஆலையை நிரந்தரமாக செயல்பட காப்பர் உருக்காலை மீண்டும் இயங்க கோரிக்கை வைக்க திட்டமிட்டு இருக்கலாம்" என்று கூறப்படுகிறது.

You'r reading ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியா?.. மத்திய அரசின் பதிலால் எழுந்த சிக்கல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `வலிதாங்க முடியாமல் மனிதர் துடித்துப் போனார்!.. சீதாராம் யெச்சூரி அனுபவித்த நரக வேதனை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்