வைரலாகும் விஜயகாந்தின் புகைப்படம்...!

விஜயகாந்த் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல்

சிங்கப்பூர் மருத்துவமனையில் செவிலியர் ஒருவருடன் விஜயகாந்த் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், ஆண்டுக்கு ஒருமுறை சிங்கப்பூர் சென்று முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது வழக்கமானது என கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த சில தினங்களாக விஜயகாந்த்தின் உடல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகையால் தான் அரசியலில் இருந்து சற்று அவர் விலகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார்.

அங்கு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியருடன் விஜயகாந்த் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பச்சை நிறத்தில் சிகிச்சை பெறுவர்கள் அணியும் ஆடையை விஜயகாந்த் அணிந்திருந்தார்.

சிகிச்சை முடிந்து விஜயகாந்த் எப்போது சென்னை திரும்புகிறார் என்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

You'r reading வைரலாகும் விஜயகாந்தின் புகைப்படம்...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தாய் திட்டியதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மரக்காணம் அருகே பரபரப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்