முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பாலபாரதி கைது- முதல்வர் விளக்கம்

'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தான் பாலபாரதி உள்ளிட்ட 14 பேரை போலீஸார் கைது செய்தனர்' என இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் முதல்வர் பேசுகையில், "8 வழிச்சாலை திட்டத்தை கொண்டுவரக்கூடாது என்று சிலர் வேண்டுமென்றே செயல்பட்டு வருகின்றனர். சேலத்துக்கு 8 வழிச்சாலை அதிகம் பயன்படும் என்று தவறான கண்ணோட்டம் உள்ளது. 8 வழிச்சாலையால் மேற்கு மாவட்டங்கள் முழுவதும் பயன்பெறும்.

பார்வையிட செல்கிறோம் எனக்கூறி 8 வழிச்சாலை பற்றி மக்களிடம் சில கருத்தை தெரிவித்துள்ளார் பாலபாரதி. அதனால் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலபாரதி உட்பட 14 பேரை போலீஸ் கைது செய்தது காவல்துறை. அனைவருமே சுதந்திரமாக செயல்படுகின்றனர். வாய்ப்பூட்டு போட்டிருந்தால் இப்படி சுதந்திரமாக பேச முடியாது" எனக் கூறினார்.

You'r reading முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பாலபாரதி கைது- முதல்வர் விளக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுக மீது அவதூறு பரப்புவதே தினகரனின் வேலை- அமைச்சர் ஜெயக்குமார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்