மீனவர்கள் கடலுக்குள் செல்லத் தடை!- வானிலை ஆய்வு மையம்

இன்று தமிழக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பசலனம் காரணமாகவும், மேற்குத் திசைக் காற்றின் வேக மாறுபாட்டாலும் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் இன்றைய வானிலை குறித்து பேட்டியளிக்க செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு சென்னையில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு தென் தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; வட கடலோர மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

You'r reading மீனவர்கள் கடலுக்குள் செல்லத் தடை!- வானிலை ஆய்வு மையம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத்திய மாநில அரசுகள் தாய் பிள்ளையாய் உள்ளனர்- அமைச்சர் உதயகுமார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்