வனப்பகுதிக்குள் வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்
நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வனவிலங்குகளையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நீலகிரி வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் உறுப்பினர்கள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் நுழைந்து விலங்குகளை வேட்டையாடுவதாக மனுதாரரான வழக்கறிஞர் சீத்தாராமன் என்பவரின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
You'r reading வனப்பகுதிக்குள் வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil