அயனாவரம் சிறுமி வழக்கு- உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுடன் 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு மீது உள்துறை செயலாளர், காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


அயனாவரத்தை சேர்ந்த 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை கடந்த 5ஆம் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டர்.

இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி முருகன் உள்பட 5 பேரின் உறவினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், எந்த ஆதாரங்களும் இல்லாமல், மனதைச் செலுத்தாமல் குண்டர் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு, மனுவுக்கு 3 வாரத்தில் பதிலளிக்கும் படி, உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர், அயனாவரம் மகளிர் காவல் ஆய்வாளர், புழல் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

You'r reading அயனாவரம் சிறுமி வழக்கு- உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கணவன் மனைவி கம்பியால் அடித்து கொலை - இதற்கா கொல்லனும்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்