வாணியம்பாடி அருகே போதையில் நண்பனை கிணற்றில் தள்ளி கொன்ற இளைஞர்கள்

 

வாணியம்பாடி அருகே மது போதையில் நண்பனை 6 பேர் சேர்ந்து கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்மாவட்டம்,வாணியம்பாடி அருகிலுள்ள சாமந்திகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தச்சுத்தொழிலாளி நவீன். இவர் தனது நண்பர்கள் சுதர்சன், பவித்ரன்,ராகுல், கல்யாண்குமார்,அருண்குமார்,அஜீத்குமார் ஆகியோருடன் அருகிலுள்ள ஒரு தென்னந்தோப்பில் நேற்று மாலை மது குடித்துள்ளனர்.

மது போதை அதிகமானதால் நவீன்குமார் என்பவரை மற்ற 6 பேரும் கிணற்றில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். இரவு நீண்ட நேரமாகியும் நவீன் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தென்னந்தோப்பில் கிணற்றில் அவனின் நண்பர்களே தள்ளிவிட்டது தெரியவந்தது. அங்கு விரைந்த போலீசார், நவீன் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுபோதையில் நண்பர்கள் சக நண்பனை கிணற்றில் தள்ளி கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading வாணியம்பாடி அருகே போதையில் நண்பனை கிணற்றில் தள்ளி கொன்ற இளைஞர்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒரே பெண்மேல் காதல்; கொளுத்திக்கொண்ட பள்ளி மாணவர்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்