புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை ரெட் அலர்ட் எச்சரிக்கை!

தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. அதன்மூலம் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேசமயம் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. இருப்பினும் கடந்த இரு நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் ரெட் அலர்ட் பாதிப்பு புதுச்சேரிக்கும் வரக்கூடும் என்று கருதி, நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மொகரம் விடுமுறையை ஈடுசெய்ய நாளை வேலை நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மழை எச்சரிக்கையாக விடுமுறை விடப்பட்டுள்ளதால், மீறி பள்ளி, கல்லூரிகள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

You'r reading புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை ரெட் அலர்ட் எச்சரிக்கை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆரோக்கியமான மாலை நேர கோதுமைமாவு குழிப்பணியாரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்