புத்தாண்டு கொண்டாட்டம்... சென்னையில் 170-க்கும் மேற்பட்டோர் காயம்

சென்னையின் பல்வேறு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த விபத்துகளில் 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் திரண்டிருந்த பொதுமக்கள், கேக் வெட்டியும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும் புத்தாண்டை வரவேற்றனர்.

இந்த கொண்டாட்டத்திற்கு இடையே சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை, ராஜீவ் காந்தி, கீழ்பாக்கம் ஆகிய அரசு மருத்துவமனையில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்ட அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading புத்தாண்டு கொண்டாட்டம்... சென்னையில் 170-க்கும் மேற்பட்டோர் காயம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இது புதுசு! - புத்தாண்டு நள்ளிரவில் 450 ஜோடி ஒரே மேடையில் திருமணம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்