தாயான 14 வயது சிறுமி- பெற்றோர் அதிர்ச்சி

14 year old girl became Mother parents shock

நெல்லை மாவட்டம் இட்டமொழியில் 14 வயது சிறுமி தாயாக காரணமாக இருந்த இளைஞரை வள்ளியூர் மகளிர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை சிலுவைபெட்டி மேலத்தெருவை சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் செல்வம். கட்டட தொழிலாளியான இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள இட்டமொழி கிராமத்தில் புதிய வீடு கட்டும் வேலைக்காக அங்கு தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது, அதே ஊரை சேர்ந்த 9ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கும், செல்வத்திற்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக செல்வம் ஆசை வார்த்தை கூறி, சிறுமியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளுமாறு செல்வத்தை சிறுமி வலியுறுத்தி வந்துள்ளார். இதை தொடர்ந்து செல்வம் சிறுமியை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். வீட்டிற்கு தெரியாமல் கர்ப்பத்தை மறைத்து சிறுமி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். நேற்று வயிறுவலியால் துடித்த சிறுமியை பெற்றோர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர் சிறுமி பிரசவ வலியால் துடிப்பதை பெற்றோரிடம் தெரிவித்ததோடு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்அடிப்படையில் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.

You'r reading தாயான 14 வயது சிறுமி- பெற்றோர் அதிர்ச்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகம் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பில் முதலிடம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்