மாணவிக்கு பாலியல் தொந்தரவு- ஆசிரியருக்கு தர்ம அடி

School teacher harassment for the student

செங்கம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை உறவினர்கள் சரமாரியாக தாக்கினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ணக்குருக்கை மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கணித ஆசிரியர் கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோரும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கண்ணன் வகுப்பறையில் இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள், அவரை கண்மூடித்தமாக தாக்கினார்கள்

கடந்த ஆயுதபூஜை விடுமுறைக்கு முன் மாணவிக்கு சிறப்பு வகுப்பு உள்ளதாக வரவழைத்து ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்,விடுமுறை முடிந்து இன்று மாணவி பள்ளிக்கு செல்லமாட்டேன் என பெற்றோரிடம் கூறியுள்ளார்.
பெற்றோர் ஏனென மிரட்டி கேட்டபின் மாணவி கணித ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்

பின்னர் மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு சென்று கணித ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தலையில் பலத்த காயத்துடன் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்

You'r reading மாணவிக்கு பாலியல் தொந்தரவு- ஆசிரியருக்கு தர்ம அடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வைரமுத்துவை பற்றிய உண்மையை சொன்ன ரஹ்மானின் சகோதரி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்