சென்னை ரயில்நிலையங்களில் மத்திய போலீஸ் பாதுகாப்பு

Central police security at Chennai railway stations

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை ரயில்நிலையங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 11 தினங்களே உள்ளது. இதனையொட்டி, புத்தாடை, நகை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் ரயில்நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கேமிராக்கள் வைத்து கண்காணிக்கப்படுவதோடு, கூடுதலாக போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசாருடன் ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை கூட்டம் குறையும் வரை பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

You'r reading சென்னை ரயில்நிலையங்களில் மத்திய போலீஸ் பாதுகாப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குட்கா முறைகேடு- அதிகாரி சிவகுமாருக்கு ஜாமின் வழங்க மறுப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்