மூன்று காமிராக்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்30: பிப்ரவரி 27ல் அறிமுகம்

Samsung to launch Galaxy M30 in India on February 27, company confirms

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன், பிப்ரவரி 27ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளேவுடன் வரும் கேலக்ஸி எம்30, பின்பக்கம் மூன்று காமிராக்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. 5000 mAh ஆற்றல் கொண்ட பேட்டரி இதில் இருக்கும். எக்ஸிநோஸ் 7904 பிராசஸரில் இயங்கக் கூடியது.

இயக்கவேகம் 4 ஜிபி RAM மற்றும் 6 ஜிபி RAM இவற்றுடன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பளவுடன் இது சந்தைக்கு வருகிறது. சாம்சங் கேலக்ஸி எம்30 போனின் விலை ரூ.14,990 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading மூன்று காமிராக்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்30: பிப்ரவரி 27ல் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யம்மி.. பால்கோவா வீட்டிலேயே செய்யலாம் வாங்க..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்