மறுக்கப்படும் விசா..பிரிட்டன்வாழ் இந்தியர்களுக்காக கையெழுத்து இயக்கம்

பிரிட்டன்வாழ் இந்தியர்களுக்கான விசா மறுப்பை எதிர்த்து ஆன்லைன் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டவர் நிரந்திர குடியுரிமையைப் பெறுவதற்கான வழிகளுள் ஒன்றுதான் 'ஈபி2' மற்றும் 'ஈபி3' விண்ணப்ப முறைகள்.

இதன் அடிப்படையில் ஒரு துறையில் ஆகச்சிறந்து விளங்கக்கூடிய ஒருவருக்கு அத்துறையிலேயே அமெரிக்காவிலேயே நீடிப்பதற்கு 'ஈபி2' விண்ணப்பம் மூலமும் ஒரு துறையில் சிறந்த திறமை உடையவர் அதே நிலையில் அமெரிக்காவின் நிரந்திர குடியுரிமையைப் பெற 'ஈபி3' விண்ணப்பம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்ற வசதி உள்ளது.

இதேபொல் பிரிட்டனிலும் ஒரு துறையில் ஆகச்சிறந்து விளங்கக்கூடிய ஒருவருக்கு அத்துறையிலேயே பிரிட்டனிலேயே பணியாற்ற நிரந்திர குடியுரிமை வழங்கப்படும். இந்தத் திட்டம் கடந்த 2010-ம் ஆண்டுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2010-ம் ஆண்டுக்கு முன்னர் குடிவந்தோருக்கும் தற்போது நிரந்திர குடியுரிமைக்கான விண்ணப்பப் படிவம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பிரிட்டன்வாழ் இந்தியர்களுக்கு ஆதரவாக 30ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கான உரிமையை அளிப்பதற்கான நடைமுறையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading மறுக்கப்படும் விசா..பிரிட்டன்வாழ் இந்தியர்களுக்காக கையெழுத்து இயக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `மோடி பிடியில் காங்,. எம்.எல்.ஏ’ - வழக்குகளை தோண்டும் மத்திய அரசு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்