75 மாடி 528 அறைகள் - உலகின் மிகப்பெரிய ஓட்டல் துபாயில் திறப்பு!

உலகின் மிக உயரமான ஓட்டல் என்ற பெருமையுடன் 355 மீட்டர் உயரம் கொண்ட ஜிவோரா ஓட்டல் துபாயில் இன்று திறக்கப்படுகிறது.

உலகின் மிக உயரமான ஓட்டல் என்ற பெருமையுடன் 355 மீட்டர் உயரம் கொண்ட ஜிவோரா ஓட்டல் துபாயில் இன்று திறக்கப்படுகிறது.

துபாயில் ஜிவோரா என்று பெயரிடப்பட்ட உலகின் உயரமான ஓட்டல் இன்று திறக்கப்படுகிறது. இந்த ஓட்டலில் 528 அறைகள் உள்ளன. 75 மாடி கொண்ட இந்த கட்டிடம் 356 மீட்டர் உயரம் கொண்டது.

355 மீட்டர் உயரத்தில் அங்குள்ள மேரியார்ட் மார்க்குயிஸ் ஓட்டலை விட இது ஒரு மீட்டர் அதிக உயரம் கொண்டது. இந்த ஓட்டல் ஜிவோரா என்று பெயரிடப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் மின்னும் ஓட்டல் ஜிவோரா இன்று திறக்கப்படுகிறது.

இந்த ஓட்டல் 75 மாடிகளையும், 528 அறைகளையும், நான்கு விடுதிகளையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

துபாயில் புர்ஜ் அல் அராப் ஓட்டல் 321 மீட்டர் உயரமும், ரோஸ் ரேஹன் ஓட்டல் 333 மீட்டர் உயரமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கெவோரா ஓட்டல் உலகின் மிக உயரமான ஓட்டல் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளது.

You'r reading 75 மாடி 528 அறைகள் - உலகின் மிகப்பெரிய ஓட்டல் துபாயில் திறப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையில் பயங்கரம்: நடந்து செல்லும் பெண்களை தாக்கி சங்கிலி பறித்த ஆசாமிகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்