மர்ம கடிதம்: பிரித்த ட்ரம்ப் மருமகள் மயக்கம்!

மர்ம கடிதம் ஒன்றைத் திறந்து பார்த்த டொனால்டு ட்ரம்ப்பின் மருமகள் மயக்கமடைந்தார். 

அமெரிக்காவில் முக்கியப் பிரமுகர்களின் வீட்டுக்கு வரும் கடிதங்களில் மர்மப்பொடி அனுப்பும் வழக்கம் கடந்த 2001-ம் ஆண்டிலிருந்து தொடர் கதையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மூத்த மகன் ஜூனியர் ட்ரம்ப் பெயரில் ஒரு கடிதம் அவரது வீட்டுக்கு வந்துள்ளது. வீட்டிலிருந்த அவரது மனைவி வனேசா ட்ரம்ப் அந்தக் கடிதத்தைப் பெற்றுள்ளார்.

கணவருக்கு வந்தக் கடிதத்தைப் பிரித்த வனேசா ட்ரம்ப் மர்மமான முறையில் திடீரென மயக்கமடைந்தார். அவருக்கு அருகிலிருந்தவர்களுள் மூவர் மயக்கமடைந்தனர். இதையடுத்து மயக்கமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இன்று காலையில் நடந்த இச்சம்பவத்தால் வெள்ளை மாளிகை கலக்கமடைந்துள்ளது.

You'r reading மர்ம கடிதம்: பிரித்த ட்ரம்ப் மருமகள் மயக்கம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாரதிராஜா மீது வழக்குப் பதிவு! - விநாயகர் குறித்த பேச்சால் சர்ச்சை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்