டெல்லியை விஞ்சிய இஸ்ரேல் கொடூரம்.. 16 வயது சிறுமியை சீரழித்த 30 ஆண்கள் வெடித்த போராட்டம்!

16 year old raped by 30 mens at isrel

இஸ்ரேல் நாட்டின் கடலோர நகரமான ஈலாட்டில் 16 வயது சிறுமியை 30 ஆண்கள் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈலாட்டை அந்த சிறுமி தனது நண்பர்களுடன், ரிசார்ட் ஒன்றிற்கு தனது ஆண் நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அப்போது ஹோட்டலில் உள்ள கழிவறைக்கு செல்லும்போது, அங்கிருந்த ஆண்கள் சிலர் அவரை தூக்கிக்கொண்டு ஹோட்டல் அறையில் அடைத்து வைத்துஅவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவரை சீரழித்தது ஒரு ஆளோ, இரண்டு ஆளோ அல்ல. மொத்தம் 30 ஆண்கள் அவரை அடுத்தடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த 30 பேரில் பெரும்பாலானோர் 20 வயதுக்கும் குறைவானார்கள் எனக் கூறப்படுகிறது.

மேலும் அந்த சிறுமியை சீரழித்ததை வீடியோவாக எடுத்தும் வைத்துள்ளனர். அதேநேரம் சிறுமியுடன் வந்த ஆண் நண்பர்கள் அவரை காப்பாற்ற முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்தபின் சிறுமி புகார் கொடுத்துள்ளார். அப்போது விஷயம் பெரிய சர்ச்சை ஆகவில்லை. இதன்பின் இஸ்ரேல் தலைநகர் டெவில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சிறுமிக்காக போராட்டங்கள் வெடித்ததை தொடர்ந்தே குற்றச் சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து பேசியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ``இது அதிர்ச்சியளிக்கிறது, வேறு வார்த்தை இல்லை. இது சிறுமிக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும், இது அனைத்து கண்டனங்களுக்கும் தகுதியானது. குற்றம் இழைத்தவர்கள் நீதிக்கு முன் கொண்டு வர வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் நமது டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்தை விட மிகப்பெரிய கொடூரம் என்று தற்போது பேசப்பட்டு வருகிறது.

You'r reading டெல்லியை விஞ்சிய இஸ்ரேல் கொடூரம்.. 16 வயது சிறுமியை சீரழித்த 30 ஆண்கள் வெடித்த போராட்டம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மலச்சிக்கலை போக்க எளிய வீட்டு வைத்தியம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்