கனடாவிலுள்ள இந்திய உணவகத்தில் குண்டு வெடிப்பு...

கனடாவில் இந்திய உணவகத்தில் மர்ம பொருள் வெடித்தது

கனடாவின் ஆறாவது பெரிய நகரம் ஒண்டாரியோ. இங்கு மிஸிசாகுவாவில் பாம்பே பேல் என்ற இந்திய உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. இதில் 15 பேர் காயமுற்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை சந்தேகத்துக்குரிய இரு நபர்களின் படங்களை வெளியிட்டுள்ளது. தலையை மூடக்கூடிய உடை அணிந்து வந்த இரு நபர்களில் ஒருவரின் கையில் மர்ம பொருள் ஒன்று இருக்கிறது. அப்பொருளை உணவகத்தினுள் வைத்து விட்டு அவர்கள் சென்றிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வெடிப்பில் உணவகத்தின் முன்புற ஜன்னல்கள் உடைந்து வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிதறியுள்ளன. காயமடைந்தவர்களுள், மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை குறித்த விவரங்களை +1-647-668-4108 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று கனடாவிலுள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading கனடாவிலுள்ள இந்திய உணவகத்தில் குண்டு வெடிப்பு... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏன் இந்த கொலை வெறி.. அமெரிக்காவில் தொடரும் சம்பவங்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்