பிரிட்டன் கோடீஸ்வரர் தாய்லாந்தில் கொன்று புதைப்பு

பிரிட்டனை சேர்ந்த கோடீஸ்வரர் ஆலன் ஹாக்கும் அவரது மனைவியும் தாய்லாந்து பெண்ணுமான நாட் சுடனும் தாய்லாந்தில், வடபிராந்தியமான ப்ரே பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் எடின்பர்க் பகுதியை சேர்ந்தவர் ஆலன் ஹாக் (வயது 64). கோடீஸ்வரரான இவர், தாய்லாந்தில் நீச்சல்குளத்துடன் கூடிய ஆடம்பர பங்களா ஒன்றை கட்டியுள்ளார்.

தம்பதியர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து ஒரு வார காலம் கழித்து, சொந்த இடத்திலேயே அவர்கள் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலன் ஹாக், துப்பாக்கியால் சுடப்பட்டும், அவரது மனைவி நாட் சுடன், சுத்தியலால் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு, இரண்டு மீட்டர் ஆழமான குழியில் புதைக்கப்பட்டுள்ளதாக ப்ரே பிராந்திய காவல் அதிகாரி மனாஸ் கெர்ட்சுஹோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் அண்ணன் வருட் ரட்டன்சாஜ்ஜகிட், குடும்ப பிரச்னை, பகை மற்றும் சொத்து தகராறில் 1,540 டாலர் கூலி பேசி இந்தக் கொலையை செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. கொலையுண்ட பெண்மணி நாட்டின் அண்ணன் உள்பட மூவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

You'r reading பிரிட்டன் கோடீஸ்வரர் தாய்லாந்தில் கொன்று புதைப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது - குடியரசுத் தலைவர் வழங்கினார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்