ஆப்கானில் தரையில் விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டர்!

Army helicopter crash in Afghanistan


ஆப்கானிய இராணுவ ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராணுவ அதிகாரிகள், வீரர்கள் உள்பட 25 பேருடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர், தரையில் விழுந்துள்ளது.  அதில்  மேற்கு மண்டலத்தின் துணைத் தளபதி உள்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அரார் தாரா மாவட்டத்திலிருந்து 9.10 மணியளவில் (4.40 மணி GMT) இருந்து ஹெலிகாப்டர் விரைவாக மோதியது என்று ஃபராஸ் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் முகம்மது நாசர் மெஹ்ரி தெரிவித்தார்.

அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரைத் தாங்கள் தான் சுட்டு வீழ்த்தியதாக தலிபான் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது. இருந்தபோதும் ஹெலிகாப்டர் கீழே விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

You'r reading ஆப்கானில் தரையில் விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருப்பதியில் இதை பயன்படுத்தினால் 5000 முதல் 25000 வரை அபராதம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்