இன்றைய இராசி பலன்கள் --- (30.09.2018)

இன்றைய உங்கள் ராசிக்கான பலன்களை அறிந்துக் கொள்ளுங்கள்

by Vijayarevathy N, Sep 30, 2018, 09:49 AM IST

 இன்றைய உங்கள் ராசிக்கான பலன்களை அறிந்துக் கொள்ளுங்கள்.

மேஷம்: இன்று நம்பிக்கை எனும் மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். குடும்பத்தினரின் உதவியால் உங்கள் தேவைகள் கவனிக்கப்படும். உங்கள் மனதிற்கினியவரிடம் கருத்தை இன்றே கூறுங்கள், நாளை என்பது தாமதமாக இருக்கலாம். பயணம் - பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. இந்த நாள் வசந்த காலத்தை போன்றது. நீங்கள் இருவர் மட்டுமே ரொமான்ஸில் உலகையே மறக்கும் நாள்.

ரிஷபம்: குழந்தைகளின் திறமை வெளிப்பாடு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தரும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். நீங்கள் விரும்பும் எல்லா கவனத்தையும் பெறும்போது - அற்புதமான நாளாக அமையும். பல விஷயங்கள் வரிசையாகக் கிடைக்கும். எதைப் பின்பற்றுவது என்பதில் உங்களுக்குப் பிரச்சினைகள் வரும். இன்று, உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள்.

மிதுனம்: சில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டார் சீரியசான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்கள் மகிழ்ச்சியை பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தனிமையாகவும் தாழ்வு மனதோடும் இருந்த அவர்கள் தங்கள் மதிப்பை உணரட்டும்.

கடகம்: உங்களின் கடுமையான நடத்தையால் மனைவியுடன் உறவு பாதிக்கப்படலாம். எதையாவது செய்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை யோசியுங்கள். முடியுமானால் வெளியில் சென்று மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். காதல் வாழ்க்கை சற்று கடினமாக இருக்கலாம். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது - சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் துணையின் கண்டிப்பான பேச்சால் இன்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

சிம்மம் :உடல்நலம் நன்றாக இருக்கும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்வதால், அவர்கள் சங்கடப்படுவார்கள். நீங்கள் அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இடையில் அது தடையைத்தான் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அன்புக்குரியவரின் வருத்தத்திற்கு உங்களின் புன்னகைதான் அருமருந்தாக அமையும். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள்.

கன்னி: வெளிப்படையான பயமற்ற கருத்துகள் உங்கள் நண்பரின் தற்பெருமையை காயப்படுத்தும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் உதவிக்கு சகோதரர் வருவார். வாழ்க்கையில் ஒத்துழைப்புதான் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். காதல் விவகாரத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்.

துலாம்: நல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம் - அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும். காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு - மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள்.

விருச்சிகம்: சிறிது மன அழுத்தம் இருந்தாலும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். மனைவியுடன் உறவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மிக நல்ல நாள். பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு இருவருமே தயாராக இருக்க வேண்டும். ரொமான்ஸ் உற்சாகமாக இருக்கும் - எனவே நீங்கள் காதலிப்பவரை தொடர்பு கொள்ளுங்கள், இந்த நாளை சிறப்பானதாக ஆக்குங்கள். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் துணையின் அன்புக்காக ஏங்குகிறீர்கள் என்றால் அது இன்று அபரிமிதமாக கிடைக்கும்.

தனுசு: போதிய ஓய்வு எடுக்காமல் இருந்தால் மிகுந்த களைப்பாக உணர்வீர்கள். உங்களுக்கு கூடுதல் ஓய்வு தேவைப்படும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். மாலையில் விருந்தினர்கள் வருகை புரியலாம். அன்பின் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்.

மகரம்: உடல் நலனுக்காக குறிப்பாக மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் - எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது. வேலைகள் நிலுவையில் இருந்தாலும் ரொமான்சும் சமூக நிகழ்வும் உங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள். திருமண வாழ்வில் உண்மையான இன்பத்தை நீங்கள் இன்று அடைவீர்கள்.

கும்பம்: வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், வாழ்வில் அக்கறை காட்டுவதே உண்மையான சவால் என உணருங்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். இனிமையான நடத்தையால் குடும்ப வாழ்வு பிரகாசமாகும். சிலர் அன்பான புன்னகையால் ஒரு தனி நபரை சமாளித்துவிடுவர். மற்றவர்களுடன் நீங்கள் நட்பாக இருக்கும்போது - நீங்கள் வாசனைமிக்க மலரைப் போல மாறுகிறீர்கள்.. பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். திருமண வாழ்வில் அதிக எதிர்பார்ப்பு இருந்தால் இன்று ஏமாற்றம் ஏற்படலாம்.

மீனம்: உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் - பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு ஊக்கம் அளிப்பார்கள். காதல் விவகாரத்தில் அடிமையைப் போல இருக்காதீர்கள். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். உங்கள் துணை உங்கள் மேல் சந்தேகம் கொள்ளும்படியான சூழல் இன்று அமையக்கூடும்.ஆனால் இறுதியில் உங்கள் துணைவர்/துணைவி உங்களை புரிந்து நடந்து கொள்வார்.

 

 

You'r reading இன்றைய இராசி பலன்கள் --- (30.09.2018) Originally posted on The Subeditor Tamil

More Instant articles News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை