நீட் தேர்வு எழுதுவதற்கு கவச உடையில் வந்த மாணவி

சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான மருத்துவ நுழைவு தகுதி தேர்வு (நீட்) எழுதுவதற்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை (பிபிஇ) அணிந்து ஒரு மாணவி வந்தார்.

இதுவரை நடந்த நீட் தேர்வுகளில் தேர்வர்கள் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். அது குறித்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (செப்டம்பர் 13) ஞாயிறு நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில் காலை 11 மணியிலிருந்தே தேர்வு மையத்தினுள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா பரவலை முன்னிட்டு மாணவ மாணவியர் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. கையுறைகள் மற்றும் முகத்திற்கான தடுப்பும் (ஃபேஸ் ஷீல்ட்) அணிந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. சென்னையிலுள்ள மையம் ஒன்றுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை (பிபிஇ) அணிந்து மாணவி ஒருவர் வந்தது அங்கிருந்தோரை திகைக்க வைத்தது. அவர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.

விமானப் படை அதிகாரியான ஷியாம் தேவ் சர்மா கடந்த ஆகஸ்ட் மாதம் தாம்பரம் விமானப் படை தளத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவரது மகள் கீதாஞ்சலி சர்மா, நீட் தேர்வு எழுதுவதற்கு ராஜஸ்தானிலுள்ள கோட்டா மையத்தை தெரிவு செய்திருந்தார். ஷியாம் தேவ், தாம்பரம் மாற்றலாகியதையடுத்து கீதாஞ்சலி தன் தேர்வு மையத்தை சென்னைக்கு மாற்றினார். சென்னையில் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக கீதாஞ்சலி கவச உடை அணிந்து வந்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds

READ MORE ABOUT :