போதையில் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்த போலீஸ் கைது

சென்னையில் பஸ்ஸுக்கு காத்து நின்ற இளம்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிறன்று இரவு இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அருகிலிருந்தவர்கள் சீருடையில் இருந்த போலீஸை நையப் புடைத்துள்ளனர். அவர் குடிபோதையில் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது. தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நூறு அடி சாலையில் அம்பிகா எம்பயர் ஹோட்டல் அருகே ஞாயிறன்று இரவு 10 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் இளம்பெண் ஒருவர் பேருந்துக்கா காத்து நின்றுள்ளார்.

அந்தப் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் அவர், பணி முடித்து வீட்டுக்குத் திரும்புவதற்காக காத்திருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வருமாறு அப்பெண்ணை அழைத்துள்ளார். அப்பெண் மறுக்கவே அவர் இறங்கி வந்து அப்பெண்ணின் கையைப் பிடித்து தன்னுடன் வருமாறு இழுத்ததாக கூறப்படுகிறது. அந்த இளம்பெண்ணும் அவர் அருகில் நின்றிருந்த இன்னொரு பெண்ணும் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளனர். அருகிலிருந்தவர்கள் மற்றும் அவ்வழியே சென்றவர்கள் உதவிக்கு ஓடி வந்தபோது, கையைப் பிடித்து இழுத்தவர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது.

அவர் காவலர் சீருடையில் இருந்துள்ளார். பொதுமக்கள் அவரை நையப்புடைத்துள்ளனர். மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தை சேர்ந்த ராஜீவ் என்ற போலீஸ்காரர் அரும்பாக்கத்தில் வசிக்கிறார். அவர் பணி நிமித்தம் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். மது போதையில் இளம்பெண்ணிடம் தவறாக நடந்த அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். பொது மக்கள் தாக்கியதில் காயமுற்றிருப்பதால் பெயிலில் அனுப்பப்பட்டுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds

READ MORE ABOUT :