திருமணத்துக்கு பிறகு அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கும் ப்ரியங்கா சோப்ரா!

Sanjay Leela Bhansali confirms working with Priyanka Chopra

by Sakthi, Mar 21, 2019, 10:35 AM IST
பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை புதுப்படங்கள் கமிட்டாவதும், உலக திரை விழாக்களில் கலந்துகொள்வதும் என பிஸியான நடிகை ப்ரியங்கா சோப்ரா. அடுத்தடுத்து பாலிவுட்டில் இரண்டு படங்கள் நடிக்கவிருக்கிறார். 
 
priyanka chopra ப்ரியங்கா சோப்ரா
 
பாலிவுட்டில் கடந்த 2016ல் ‘ஜெய் கங்காஜல்’ படத்தில் நடித்தார் ப்ரியங்கா சோப்ரா. அதன்பிறகு எந்த பாலிவுட் படத்திலும் கமிட்டாகவில்லை. ஏனெனில் ‘பேவாட்ச்’, ‘எ கிட் லைக் ஜாக்’,‘இஸ்னாட் ரொமாண்டிக்’ என ஹாலிவுட் படங்களில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்திவந்தார். மூன்று வருடங்கள் கழித்து, பாலிவுட்டில் ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியாக தயாராகிவரும் படம் ‘தி ஸ்கை இஸ் பிங்க்’. சோனாலி போஸ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம் வரும் அக்டோபரில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு இந்தி படத்தில் ப்ரியங்கா நடிக்கவிருப்பதாக தகவலும் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.  
 
தற்பொழுது சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. இந்த செய்தியை சல்மான் கானே தன்னுடைய ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கார்.  ‘இன்ஷாஅல்லா’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் அலியா பட்டும் நடிக்கிறாராம். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சஞ்சய் லீலாவிடன் ஒரு கேள்வி கேட்கப்பட்டது “ ப்ரியங்கா சோப்ரா மீண்டும் உங்கள் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்களாமே?’அதற்கு பதில் அளித்த சஞ்சய், “ ஆமா, அந்தப் படத்துக்காக நானும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். சஞ்சய் - ப்ரியங்கா கூட்டணியில் உருவாக இருக்கும் படத்துக்கு கங்குபாய் என்று பெயர் உறுதியாகியிருக்கிறது. 
 
ஆக, தற்பொழுது சல்மான்கானுடன் ‘இன்ஷாஅல்லா’ படத்தை முடித்த கையோடு, ப்ரியங்கா சோப்ராவுடன் ‘கங்குபாய்’ படத்தை இயக்குவார் சஞ்சய் லீலா பன்சாலி என்பது உறுதியாகியுள்ளது. 

You'r reading திருமணத்துக்கு பிறகு அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கும் ப்ரியங்கா சோப்ரா! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை