எனது குடியுரிமை குறித்து ஏன் தோண்டுகிறீர்கள்? ஆவேசப்பட்ட அக்ஷய் குமார்!

Akshay Kumar got tensioned about his dual citizenship drag into social media

by Mari S, May 3, 2019, 18:27 PM IST

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கனடா நாட்டை சேர்ந்தவர் என்றும் இந்தியா மற்றும் கனடா என இரட்டை குடியுரிமைகளை வைத்துள்ளவர் எனவும் சிலர் அவ்வபோது அவரது குடியுரிமை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இது வைரலாக பரவ, கடுப்பான அக்‌ஷய் குமார், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், எனது குடியுரிமை பற்றி இங்கே சிலர் தேவையில்லாமல் தோண்டுகின்றனர். நான் எப்போதும், எனது குடியுரிமை குறித்த உண்மையை மறைத்தோ அல்லது எனது கனடா பாஸ்போர்ட்டை மறைத்தோ வாழவில்லை. இது எந்த அளவுக்கு உண்மையோ அதே போல கடந்த 7 ஆண்டுகளில் நான் கனடாவிற்கு செல்லவே இல்லை என்பதும் உண்மையான விஷயம். மேலும், இந்தியா மீதான எனது அன்பையும் தேச பற்றையும் யாராலும் பிரிக்க முடியாது. அதனை யாருக்கும் நிரூபிக்கும் அவசியமும் எனக்கு கிடையாது. ஆனால், தேவையில்லாமல் சில பல காரணங்களுக்காக அவ்வப்போது எனது குடியுரிமை குறித்து இங்கு எழுப்பப்படும் விமர்சனங்கள் எனக்கு சங்கடத்தை ஏற்படுகின்றன. என்னால் இயன்ற வரை இந்தியாவிற்கான எனது அர்ப்பணிப்புகளை செய்து அதனை மேலும் வலிமையாக்க பாடுபடுவேன் என அக்‌ஷய்குமார் நீண்ட பெரிய பதிவினை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில், நடிகர் அக்‌ஷய் குமார் மோடியுடன் பேட்டி எடுத்த நிலையில், அதனை தொடர்ந்து, அக்‌ஷய் குமாரின் கனடா குடியுரிமை குறித்த சர்ச்சையை சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading எனது குடியுரிமை குறித்து ஏன் தோண்டுகிறீர்கள்? ஆவேசப்பட்ட அக்ஷய் குமார்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை